கோவிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் ஏற்படும் நன்மை என்ன?
சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம்
ஏற்றி 12 முறை
சுற்றி வர வேண்டும். இதேபோல் 48 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் வழக்கு சாதகமாகும். இதேபோல் 21 செவ்வாய்க்கிழமை நெய்தீபம்
ஏற்றி வழிபட்டு வந்தால் பில்லி சூனியம் போன்ற தீய சக்திகள் விலகும்.
அமாவாசை காலங்களில் நெய்தீபம் ஏற்றி
பெருமாளை வணங்கி வந்தால் பித்ரு தோஷம் நீங்கும். வெள்ளிக்கிழமைகளில் நவகிரக
சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்ட நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால்
கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கும்.
நெய் விளக்கு
ஏற்றிய பிறகு கோவில் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வந்தால் நினைத்த காரியம் கைகூடும்.
அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.
பிரம்மமுகூர்த்தம் என்று சொல்லப்படும் 4:30 மணி
முதல் 6 மணிக்குள்
விளக்கேற்றுவது நல்லது. அதேபோல் மாலையில் 4:30
மணி முதல் 6 மணிக்குள்
விளக்கேற்ற வேண்டும்.
துர்க்கை அம்மன்
சன்னிதியில் நெய் தீபம் ஏற்றினால் சாபம் நீங்கி நல்லது நடக்கும்.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments