அணையாத நெருப்பு, கற்சங்கிலி, தாவும் பரி பஞ்சகல்யாணி, புழுங்கல் அரிசி நெய்வேத்தியம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்த புதுக்கோட்டை ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் சிறப்புகளை இங்கு விரிவாக பார்ப்போம்...
அதிசயத்தக்க தாவும் பரி:
இந்த கோயிலில் உள்ள தாவும் பரி என்ற ஒற்றை கல்லில் செதுக்கப்பட்ட குதிரை உள்ளது. இதன் மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல அமைக்கப்பட்டுள்ளது.
சிவ பெருமான் நரியைப் பரியாக்கிய புராண நிகழ்வு நடந்த பெருமை வாய்ந்த கோயிலாகும். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தாவும் பரி குதிரையை அங்கம் அங்கமாக பார்த்தால் நம்மில் ஒரு பிரமிப்பு ஏற்படுவதோடு, அது ஒரு உயிருள்ள குதிரையோ என எண்ணத் தோன்றும் அளவிற்கு மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புழுங்கல் அரிசி நெய்வேத்தியம்
எல்லா ஆலயங்களிலும் பச்சரி கொண்டு சுவாமிக்கு அமுது படைப்பது வழக்கம். ஆனால் இந்த ஆவுடையார் கோயிலில் 6 காலத்திற்குமே புழுங்கல் அரிசியால் செய்யப்பட்ட அமுது நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. அதோடு பாகற்காய், கீரை சேர்த்து அமுது படைக்கப்படும் சிறப்பு இந்த கோயிலில் மட்டும் தான் காண முடியும்.
எல்லா ஆலயங்களிலும் பச்சரி கொண்டு சுவாமிக்கு அமுது படைப்பது வழக்கம். ஆனால் இந்த ஆவுடையார் கோயிலில் 6 காலத்திற்குமே புழுங்கல் அரிசியால் செய்யப்பட்ட அமுது நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. அதோடு பாகற்காய், கீரை சேர்த்து அமுது படைக்கப்படும் சிறப்பு இந்த கோயிலில் மட்டும் தான் காண முடியும்.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples


0 Comments