கந்தா சரணம்... ஷண்முகா சரணம்...
கந்தர் அலங்காரம் மற்றும் ஸ்ரீ கிருபானந்த வாரியார் விளக்கமும்...
**************************************************
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே...
பொருள் : நமது கண்களுக்குத் துணையாவது திருமுருக ப்பெருமானது.புனிதமானவையும் மென்மையானவையுமான செந்தாமரை மலர். போன்ற திருவடிகளேயாகும். உண்மையில் சிறிதும் குறையாத சொல்லுக்குத் துணையா வது 'முருகா' என்று கூறும் அப்பரமபதியி lன். திரு நாமங்களேயாகும். முன்பு செய்த பழியை தருகின்ற.பாவத்தை அகற்றுவதற்குத் துணை யாவது திருமுருகபிறருமானின் பன்னிரண்டு புயங்களுமேயாகும். அஞ்சுந்தன்மையுடைய
தனிமையான வழிக்குத் துணையாவது திருச் செங்கோட்டில்.எழுந்தருளியுள்ள கந்தப்பெரு மானுடைய கூர்மையான வேலாயுதமும் மயிலுமேயாகும்.
இதற்கு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி சொன்ன விளக்கமும் கதையும்..
**************************************************
எனக்கு இத்தனை வீடு இருக்கு, பேங்க் பேலன்ஸ் இவ்வளவு, இத்தனை குழந்தைகள், இத்தனை கடை வியாபாரம் என்று பெருமை யாக சொல்வார்கள் அவர்கள் கூட இருக்கும் சொந்தம் நண்பர் அனைத்தும் போலியாகவே இருக்கும் மேலும் இறக்கும் போது எதுவும் கூட வராது இதைபற்றி திருமுருக கிருபானந்த வாரியார் சொன்ன கதை:
முற்றும் துறந்த முனிவர் ஒருவர் திருத்தல யாத்திரை புரிந்துவந்தார். பற்றற்ற பரம ஞானியாகிய அவர் இன்றிருந்த ஊர் நாளை இரார். ஒருவேளையே உப்பில்லாத உணவை உண்பார். அவர் பொய்யை அதிமாக வெறுப்பவர்.
“மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரில் தலை”
என்ற திருக்குறளை இடையறாது கூறுவார். அவருடைய மறந்தும் பொய் புகலாது. பொய் புகல்வார் மனையில் புசியார்.
ஒருநாள்ஒரு ஊருக்கு சென்றார். “இந்த ஊரில் உண்மையாளர் யாவர்?” என்று உசாவினார். அதோ தெரிகின்ற மாடி வீட்டில் வாழ்கின்ற முதலியார் உண்மையாளர். அவர் அடியார் பக்தி உடையவர். ஒரு லட்சம் செல்வ மும் நான்கு புதல்வர்களும் உடையவர் என்று பலரும் பகர்ந்தார்கள். பின்னர் முதலியாருடை ய வீட்டை முனிவர் அணுகினார்.
ஆசனத்தில் அமர்ந்திருந்த முதலியார் உடனே எழுந்தார். ஓடிவந்து ஞானியார் அடைமலர் மீது விழுந்தார். அவரை ஆசனத்தில் எழுந்தருளல் புரிந்து ,”பெருமானே உணவு செய்ய எழுந்தரு ளல் வேண்டும்” என்று வேண்டினார். அவரு டைய அன்பு, பணிவு, அடக்கம் முதலிய நற்கு ணங்களைக் கண்டு முகமலர்ந்து, உண்மையா ளர்தானா என்று சோதித்த பின்னரே உணவு செய்ய வேண்டும் என்று எண்ணிணார்.
“ ஐயா, உமக்குச் செல்வம் எவ்வளவு உண்டு?”
“சுவாமி! இருபத்து இரண்டாயிரம் ரூபாய் உண்டு”
குழந்தைகள் எத்தனை பேர்?”
“சுவாமி! ஒரே புதல்வன் தான்”
“உமக்கு வயது என்ன?”
“சுவாமி! எனக்கு வயது மூன்று வருஷம் ஐந்து மாதம் ஏழு நாள் பதினாறரை மணி”
முனிவருக்கு பெரும் சினம் மூண்டது. “ஐயா! நீர் சுத்தப் புளுகனாக இருகிறீர். நீர் பேசுவதெ ல்லாம் பெரும் புரட்டு. உம் வீட்டு அன்னம் என் தவத்தை அழிக்கும். நான் பொய்யர் வீட்டில் புசியேன்” என்று கூறிச் சீறி எழுந்தார்.
முதலியார் அவர் காலில் விழுந்து, “அருள் நிறைந்த அண்ணலே! அடியேன் ஒருபோதும் பொய் புகலேன். சத்தியம் சொல்கின்றேன். சற்று நிதானமாக ஆராய்ந்துபார்த்து உண்மை உணர்வீராக” என்று கூறித் தனது வரவு செலவு புத்தகத்தைக் காட்டினார். அதில் இருப்புத் தொகை ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்தது.
“அடேய்! இதோ உனக்குச் சொத்து ஒரு லட்சம் ரூபாய் என்று இருக்கிறதே. நீ 22,000 தான் என்று பொய் சொன்னாயே”, என்று கடிந்தார்ர் முனிவர்.
“சுவாமி! ஒரு லட்ச ரூபாய் பெட்டியில் உள்ளது. ஆனால் பெட்டியில் உள்ள பணம் எனக்கு சொ ந்தமாகுமா? இதோ பாருங்கள், தருமக் கணக் கில் இதுகாறும் 22,000 ரூபாய்தான் செலவழி ந்துள்ளது. தருமம் புரிந்த பணம் தானே என்னு டையது. இப்போதுநான் மாண்டால் பெட்டியில் உள்ள பணம் என்னுடன் வராதே. உடன் வருவ து தருமம் ஒன்றுதானே” என்று கூறீனார்.
முனிவர் இதைக் கேட்டு வியப்புற்றார். “ ஆமாம், உனக்கு நான்கு புதல்வர்கள் உன்து என்று கேள்விப்பட்டேனே?” என்றார்.
சுவாமி! எனக்குப் பிறந்த பிள்ளைகள் நால்வர்’ ஆனால் என் பிள்ளை ஒருவன் தான்.
“அப்பா! நீ சொல்வதன் கருத்து எனக்கு விளங்கவில்லையே?
“சுவாமி! விளங்கவைக்கின்றேன்”.
“மகனே! நடராஜா”, என்று அழைத்தார் முதலியார். சீட்டு விளையாடுகிறேன், வர முடியாது என்று பதில் வந்தது.
“மகனே! வேலுச்சாமி” என்று அழைத்தார் முதலியார். “ஏன் இப்படிக் கதறுகின்றாய்? வாயை மூடிக்கொண்டிரு” என்று பதில் வந்தது.
“மகனே! சிவசாமி”, என்று அழைத்தார் முதலியார். உனக்குப் புத்தி இருக்கிறதா? உன்னோடு பேச என்னால் ஆகாது. பூமிக்குச் சுமையாக ஏன் இன்னும் இருக்கிறாய்?” என்று பதில் வந்தது.
மகனே கந்தசாமி! என்று அழைத்தவுடன் கந்த சாமி ஓடிவந்து பிதாவையும் முனிவரையும் தொழுது, சுவாமி பால் கொண்டுவரட்டுமா, பழம் கொண்டுவரட்டுமா? என்று கேட்டு உபசரித்து, விசிறி எடுத்து வீசிக்கொண்டு பணிவுடன் நின்றான்.
முதலியார், “சுவாமி அந்த மூவரும் என் புதல்வ ர்களா? என் கருத்துக்கு முரண் ஆனவர்கள் என் பிள்ளைகளா? போன பிறப்பின் கடன்கா ரர்கள், இவன் ஒருவன் தான் என் பிள்ளை” என்றார்.
"அப்பா! உன் கருத்து உவகையை தருகின்றது. வயது விஷயத்தில் நீ கூறியதன் உட்பொருள் யாது?
“ சுவாமி! அடியேன் நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரம்தான் வழிபாடு செய்கின்றேன். மீதி நேரம் எல்லாம் வயிற்றுக்காகவும் குடும் பத்து க்காகவும் உழைக்கின்றேன். பேசாத நாள் எல்லாம், பிறவா நாள்தானே? இறைவ னைப் பூசிக்கும் நேரம்தான் எனக்கு சொந்தம். அடியேனுக்கு இந்த உடம்பு பிறந்து அறுபது ஆண்டுகள் ஆயின. ஐந்து வயதிலிருந்து பூசி க்கின்றேன். நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரம் பூசை செய்கின்றேன். அந்தவகையாகப் பார்த்தால், முப்பதாயிரத்து நூற்று பன்னிரண் டரை மணிநேரம் ஆகின்றது ஆகவே அடியேன் பிறந்து அறுபது ஆண்டுகள் ஆனாலும், எனக்குச் சொந்த வயது திட்டமாக மூன்று வருஷம் ஐந்து மாதம் ஏழு நாள் பதினாறரை மணிதான்”
1.தருமம் செய்த பணம் எனக்குச் சொந்தம்
2.என் கருத்தை அநுசரிக்கின்றவனே எனக்குச் சொந்தமகன்
3.பூசை செய்த நேரமே எனக்குச் சொந்தம்”, என்றார் முதலியார்.
இதனை கேட்ட முனிவர் பெரிதும் மகிழ்ந்தார். அவர் வீட்டில் உணவு உண்டு வாழ்த்திவிட்டுச் சென்றார்.
முருகன் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..
கந்தா சரணம்... ஷண்முகா சரணம்...
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments