கடவுளுக்கு கதவு இல்லா கருவறையுடன் அமைந்துள்ள பயம் போக்கும் ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம் சிறப்பம்சம்

 

பிரமிக்க வைக்கும் விதத்தில் செங்கல்பட்டு அருகே திருவடி சூலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம். இந்த கோயில், பைரவரின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்...




செங்கல்பட்டு அருகே திருவடி சூலம் என்ற இடத்தில் பிரமிக்க வைக்கும் விதமாக ஸ்ரீ மஹா பைரவர் ருத்ர ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. வேறு எங்கும் இல்லாத வகையில் புதிய கட்டக் கலையை நாம் இந்த கோயிலில் பார்க்கலாம்.

திருவிடைச் சுரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த இடம் மறுவி தற்போது திருவடி சூலம் என அழைக்கப்படுகின்றது.

கோபுரம் மேலிருந்து பார்க்க ஸ்ரீசக்கரம் போல தோற்றமளிக்கின்றது. இந்த கோயிலில் ஸ்ரீ மகா பைரவர் மூலவராக அமைந்துள்ளதோடு, கோயிலில் ஸ்ரீ கிருஷ்ணர் சந்நிதி, ஹனுமன் சந்நிதி, ஹோம மண்டபம், பெளர்ணமி மண்டபம் உள்ளிட்டவை அமைந்துள்ளது.
ஸ்ரீ மகா ருதர பைரவர்:
சிவனின் 64 திருமேனிகளில் ஒருவர் தான் பைரவர். பிரம்மாவின் தலைக்கணத்தைப் போக்க் ஔருவாகப்பட்டவர் தான் இந்த பைரவர். பைரவர் காவல் தெய்வமாக பார்க்கப்படுகின்றார். உலகத்தில் உள்ள உயிர் மற்றும் உடமைகளை காக்கக் கூடியவர்


பைரவ காயத்ரி மந்திரம்

ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments