ஹரே கிருஷ்ணா

 ஹரே கிருஷ்ணா

கிருஷ்ண பரமாத்மா கர்ணனின் பராக்கிரமத் தை புகழ்ந்த விதம். மஹா பாரதப்போரில் கர்ணணுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே துவந்த யுத்தம் நடைபெற்று வந்தது. துவந்த யுத்தம் என்பது இருவருக்கு இடையே மட்டும் நடக்கும் போர்.
மிகவும் ஆக்ரோஷமான போர். இந்த துவந்த யுத்தமானது யாருக்கு வெற்றி கிட்டும் என்று யூகிக்கவே முடியாத அளவு கடுமையாக இருந்தது.
ஒரு கட்டத்தில் பார்த்தன் மிகவும் சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை எய்து கர்ணனின் தேரை நூறு கஜம் தூரத்திற்கு தள்ளிவிட்டான். (ஒரு கஜம் என்பது 3 அடிகளாகும்). ஆனால் மீண்டும் முன்னேறிய கர்ணன், அதே போன்ற தொரு சக்தி மிக்க அஸ்திரம் ஒன்றை அர்ஜூ னனின் தேர் மீது எய்தான்.
அதனால் பத்து கஜ தூரத்திற்கு பின்னோக்கி சென்றது பார்த்தனின் தேர். அப்போது அர்ச்சு னன் தேரில் சாரதியாயிருந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா “ஆஹா.. பலே கர்ணா… அற்புதம்” என்று தன்னையும் அறியாமல் கர்ணனின் வீரத்தை புகழ்ந்து தள்ளி விட்டார்.
அர்ஜூனனுக்கு ஒரு பக்கம் ஆச்சரியம். மறுப க்கம் பொறாமை. நாம் இதே அஸ்திரத்தை எய்து கர்ணனின் தேரை நூறு கஜ தூரத்திற்கு தள்ளியதை இந்தகண்ணன் பாராட்டவில்லை. ஆனால் கர்ணனோ வெறும் பத்து கஜ தூரத்தி ற்கு நம் தேரை தள்ளியதை புகழ்ந்து பாராட்டி னாரே.
இதென்ன ஞாயம் ? “அதுமட்டுமல்லாமல் இதற்கு முன் கர்ணன், என் கிரீடத்தை தனது அஸ்திரத்தால் வீழ்த்தியபோது கூட அவனை புகழவில்லை. சொல்லப்போனால் இதைவிட அது பெரிய தீரச் செயல் ஆயிற்றே. அப்போது அவனை பாராட்டாமல் இப்போது மட்டும் ‘ஆஹோ ஓஹோ’ என்று பாராட்டுகிறாரே?
அதுவும் நான் செய்ததில் பத்தில் ஒரு பங்கே அவன் செய்தான்? இவ்வாறாக காண்டீபனின் மனதில் சந்தேகம் ஓடிக்கொண்டிருந்தன.
அர்ஜூனன் மனதில் இத்தகு சந்தேகம் ஓடிக் கொண்டிருப்பது பரந்தாமனுக்கு தெரியாதா என்ன? சரி அவனாக கேட்கட்டும் நாம் சொல் லலாம் என்று காத்திருந்தார் கண்ணன் நினை த்தது போல தக்க சமயத்தில் அர்ஜூனன் தன் மனதில் உள்ள சந்தேகத்தை கண்ணனிடம் கேட்டேவிட்டான்.
"கேசவா, தாங்கள் கர்ணன் தனது அஸ்திரத் தால் எனது கிரீடத்தை பறக்கச் செய்தபோது கூட நீ பாராட்டவில்லை. ஆனால், என்னை விட பத்தில் ஒரு பங்கு தேரை அஸ்திரத்தால் தள்ளியதற்கு நீ பாராட்டினாயே… ஏன்?”
பரமாத்மா அவனை நோக்கி ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்து பேச ஆரம்பித்தார்…
“பார்த்தா நீ கர்ணனின் தேரை நூறு கஜ தூரம் தள்ளினாய் அவனும் பதிலுக்கு அஸ்திரப் பிர யோகம் செய்து உன் தேரை பத்து கஜ தூரம் தான் தள்ளினான். இருப்பினும் அவன் செயல் தான் உன் செயலை விட பாராட்டத்தக்கது..."
" ஏனெனில், அவன் தேரைப்போலவே உன் தேரிலும் ஒரு தேரோட்டியும் ஒரு வீரனும் நின்று கொண்டிருப்பதாக நீ நினைத்து கொண்டிருக்கிறாய். உண்மை அது வல்லவே"
"உன் தேர்க்கொடியை பார். அந்தக் கொடியில் அஞ்சனை மைந்தன் ஹனுமன் இருக்கிறானே
ஏதோ அவன் உருவம் மட்டும் கொடியில் அடை யாளத்துக்காக பொறிக்கப்பட்டதாக நினைத்து க்கொண்டிருக்கிறாய். ஆனால் உண்மையில் அந்த உருவத்தில் ஹனுமன் ஆவிர்பவித்திரு க்கிறான் என்பதை மறந்து விட்டாயா?.."
"ஹனுமன் இருக்குமிடம் மந்திர தந்திரங்கள் பலனற்று போகும் என்பதால் நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உன்னைக் காக்க உன் தேரில் உன்னுடன் இருக்கிறார்.. அவ்வப் போது தன் சக்தியை வெளிப்படுத்தி உனக்கு உதவிக்கொண்டிருக்கிறார்..."
"அவர் மட்டும் இல்லையேல் என்றோ மந்திர அஸ்திரங்கள் உன் தேரை சாம்பலாக்கியிரு க்கும். கர்ணன் உன் தேரைப் பின்னுக்கு தள்ள அஸ்திரம் எய்தபோது, ஹனுமன் ‘மகிமா’ என்னும் சித்தியை பயன்படுத்தி (அஷ்டமா சித்திகளுள் ஒன்று இது!) மலை போன்ற கணமுடையவராக மாறி உன்னை காத்தார்.."
" அதுமட்டுமல்ல உன் தேரில் நானும் இருக்கி றேன். உன் தேரை அசையவிடாமல் செய்தார். ஆனால், என்னையும் ஆஞ்சநேயனின் சக்தி யையும் மீறி கர்ணனின் அம்பு உன் தேரை பத்து கஜ தூரம் பின்னுக்கு தள்ளியிருக்கிறது என்றால் அவன் அஸ்திர பிரயோகத்தின் தீரத்தை நீயே பார்த்துக்கொள்.எனவே தான் கர்ணனை மெச்சினேன்” என்றான் பார்த்தன்
இதைக் கேட்ட அர்ஜூனன் வெட்கி தலை குனிந்தான். " உண்மை தான் கண்ணா.. உன் சக்தியாலும் ஹனுமனின் சக்தியாலும் தான் நான் தாக்கு பிடிக்கிறேன். கர்ணனை போன்ற மாவீரனிடம் துவந்த யுத்தம் செய்வதே எனக்கு பெருமை தான்..." என்றான் காண்டீபன்.


Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments